Monday 25 July 2016

கபாலி படம் தோல்வியை தழுவியது ஏன் ?


ரஜினியின் ரசிகர்களே கெட்ட கனவாக மறக்க நினைக்கும் அளவுக்கு படம் தோல்வியை தழுவியது ஏன்?

1. படம் நல்லா வரவில்லை எனத் தெரிந்தும் அதற்கு இத்தனை கோடி செலவு செய்து, மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது ஏன்?  படத்தை வெளிவராமல் செய்திருந்தால் கூட சூப்பர் ஸ்டார் அவர்களின் இமேஜ், ஒட்டு மொத ரசிகர்களின் உணர்வுகள் தவிடு பொடியாகாமல் இருந்திருக்கும்.  பணம் மட்டுமே இழப்பாக இருந்திருக்கும்.

2. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்,  காட்சி அமைப்பு, பாடல் இப்படி எதுவுமே ஒரு சாதாரண புது முகம் நடிக்கும் படத்தில் கூட இப்படி இருக்காது என்று நினைக்கும் அளவுக்குக்கு கேவலமாக  ஒரு மெகா ஸ்டார் படத்தில் தந்திருப்பது மன வேதனை.  இது சூப்பர் ஸ்டார் அவர்களின் இமேஜை உடைக்க நடந்த திட்டமிட்ட சதியா? என்று கூட எண்ண தோன்றுகிறது.

3. மலேசியாவில் பாதிக்கப்படும் தமிழர்களுக்காக ரஜினி போராடுவதுதான் கதை என்றால் அது நம்பும் படியாக ஒரு சீன் கூட யதார்த்தமாக இல்லை.  அப்படியே அது உண்மை என்றாலும் அதற்கு ரஜினி ஏன் தாதாவாக இருக்க வேண்டும்?  போதைப்பொருள் இல்லை.  விபச்சாரமும் இல்லை.  யாரையும் கொள்ளையடிக்கவும் இல்லை.  நோக்கமும் தமிழர்களுக்காக போராடுவது.  பின் ஹீரோவாகவே இதை அழுத்தமாக சொல்லியிருக்கலாமே! ஏன் தாதா கெட்டப்?

4.கபாலி ரஜினி. பாட்ஷா ரஜினியிடம் ட்யூஷன் எடுக்க வேண்டும்.  ரஜினி படம் என்றாலே குழந்தைகளையும் ஈர்க்கும்  பன்ச் டைலாக், காமெடி, தாய்மார்களுக்கு பிடித்த செண்டிமெண்ட் காட்சிகள், ரசிகர்களை தியேட்டரிலேயே ஆட  வைக்கும் பாடல் காட்சிகள், சண்டை  காட்சிகள் இப்படி ஏராளமாய் இருக்கும்.  எந்திரானோடு  ஒப்பிட்டு பார்த்தால் இது ரஜினி படம்தானா ?  என்றே எண்ண தோன்றுகிறது.

5.  படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள்.  ஹீரோயின் என்ன செய்கிறார்?  படம் முழுக்க மாசமான அம்மாவாக வந்து வந்து போகிறார்.  ஒரே ஒரு சீனை தவிர நடிப்பதற்கு வாய்ப்பே தரவில்லை.  ரஜினியை சராமாரியாக சுடுகிறார்கள் மீண்டும் வந்துவிடுகிறார்.  ஹீரோயினை சராமாரியாக சுடுகிறார்கள் மீண்டும் உயிரோடு காட்டுகிறார்கள்.  ரஜினி மலேசிய தமிழர்களுக்கு உதவி செய்வதாக காட்டும் எந்த காட்சியிலும் உயிர் துடிப்பே இல்லை. ஏகப்பட்ட கையாலாகாத வில்லர்கள் கூட்டம். ரஜினியை வயதான மேக்கப் இல்லாத தோற்றத்தில் காட்டுவது, நீ என் நாயாக இருப்பே என்ற மட்ட ரகமான வசனங்களை வில்லன் பேச அனுமதிப்பது என பல அத்து மீறல்கள்.   இந்த படம் ரஜினிக்கு எதிராக திரை யுலகத்தில் யாரோ திட்டமிட்டு செய்த பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.  படமும் ஆமை வேகத்தில் கொஞ்சம் கூட விறுவிறுப்பின்றி நகர்கிறது.  நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளில் கூட நல்ல நல்ல காட்சிகளை பார்க்கலாம் போல.  ஆனால் ஒரு மெகா ஸ்டார் படத்தில் இப்படி காட்சிகளை இது வரை யாரும் பார்த்திருக்க முடியாது.

படம் முழுக்க ரஜினி பேசும் பன்ச் மகிழ்ச்சி.  ஆனால் இந்த படம் ரஜினிக்கு மட்டுமல்ல, ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த திரையுலகத்திற்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய துக்கம்.
ரஜினியை பொறுத்த வரை இது அவருக்கு மிகப்பெரிய விபத்து.
எந்திரன் 2- வில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பார்  என்று நம்புவோம்.

20/100 இந்த படம் பார்க்கும் படியாக இல்லை.

No comments:

Post a Comment